Wednesday, 30 December 2009

சிறு(திரு)வடி சரணம்


ஒரு சிறுமியின் சிரிப்பு
மிக அழகானது
அதன் ஓசை நம்மனதில்
இழுத்துவரும் எதிர்காலம்
பனிபடர்ந்தது
எனவே
சிறுமியோ இளம்பெண்ணோ சிர்த்தால்
பூக்களை நினைத்துக் கொள்ளலாம்

ஒரு சிறுமியின்/இளம்பெண்ணின்
உடல் எழிலானது
ஒரு பையனின் உடல்போலவே……
அதன் மென்மையில் உங்கள்
நினைவுத் தென்றலின்
இசைகேட்கலாம்

ஒரு சிறுமியின்/சிறுவனின் மனம்
நட்சத்திரங்கள் போல்
கேள்விகளால் ஆனது
உங்கள் மனத்திரையை விலக்கினால்
உலகையே ஒளியாகப் பார்க்கலாம்

No comments:

Post a Comment